×

கார் பந்தயத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: கொள்கை முடிவு என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா-4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, நர்மதா சம்பத் ஆஜராகி, இதனால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும். தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விதி எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றார். அப்போது நீதிபதிகள், பந்தயம் நடத்துவதன் மூலம் எவ்வளவு வருவாய் திரட்டப்படுகிறது, யார் பயனடைகின்றனர் என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், கார் பந்தயம் நடத்துவது என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதை நீதிமன்றம் ஆராய முடியாது. அரசு குறைவாகவே செலவிடுகிறது. டிக்கெட் விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. டென்னிஸ் போட்டி போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தவும் அரசு தான் ஏற்பாடு செய்கிறது. விளையாட்டு என்பது மக்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை தூண்டுவதற்காகத்தான் என்றார்.
பந்தயம் நடத்தும் நிறுவனம் தரப்பில், கார் பந்தயம் நடத்த தங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எந்த பொதுநலனும் இல்லை. ஐதராபாத்தில் கார் பந்தயம் நடத்தியதன் மூலம் அரசுக்கு 630 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்றார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

The post கார் பந்தயத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: கொள்கை முடிவு என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Court ,Chennai ,Mahadevan ,Mohammad ,Dinakaran ,
× RELATED குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால்,...